.

.
.

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்தும், புன்னகையோடு ஒரு விருதும்...

இன்னல் தீர்ந்தே இன்பம் மலர்ந்திட இனிய புத்தாண்டு 2010 இன்று புலர்ந்தது‌ நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...


அடியேனின் இந்த 51 பதிவை எட்டிப்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், நாம் பதிவிடத்துவங்கிய காலந்தொட்டு இன்றுவரை (ஏதோ ஆயிரமாயிரம் பதிவுகள் தந்து விட்டதைப்போல, என்னே ஒரு தற்புகழ்ச்சி! தாங்களைடா சாமி...!)எமது அறுவையையும் கிறுக்கல்களையும் பெரிய மனதோடு பொறுத்துக்கொன்டும், ஏற்றுக்கொன்டும் நமக்கும் ஒரு பதிவர் எனும் பெருமையை வழங்கி நம்மோடு பதிவுலகில் கைகோர்த்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளை எமது உளமார்ந்த நன்றி மலர்களை சமர்ப்பிப்பதில் நாம் பெருமையும் பேருவகையும் அடைகிறோம்...!


சுவையான ச‌மையலைப்போல் சுவாரஸ்யமான விடயம் இன்று தங்களோடு பகிர்ந்து கொள்ள...(ஆத்மா மெகாத் தொடரை முடிக்கப்போகிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே...! :)


கண்டீர்களா நண்பர்களே, அழகான விருது, அதை அளித்தவரும் ஒரு சிறப்பான பதிவுக்கு சொந்தக்காரர், அவர் திருமதி மேனகா சத்தியா அவர்கள்...! சசிகா பதிவின் சொந்தக்காரர், இவர் ஒரு அற்புதமான சமையல் நிபுண‌ர் என்பது இவர் பதிவில் நாளொரு சுவையும், பொழுதொரு வண்ணமுமாக மண‌‌க்கும் சமையல் குறிப்புக்கள் வழி நம்மால் அறிய முடிகிறது, இவர் சமையல் குறிப்புக்களால் அசத்துவதைப்போலவே, நம்மை அங்கீகரித்து அளித்த இந்த விருதும் நம்மை அச‌த்தி, ஆனந்த‌த்தில் எம்மை ஆழ்த்திவிட்டது... விருதுக்கு நன்றி சகோதரி...!

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html


இப்பதிவுலகில் நமது நட்பை ஏற்று நமக்கு தமது வற்றாத அன்பையும் ஆதரவையும் நட்பு வடிவிலும், நயமான பின்னூட்டங்களின் வடிவிலும் வழங்கி ஆதரவளித்த அன்புள்ளங்கள் அத்தனைபேருக்கும் இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் அன்போடு ஏற்று அகமகிழ்வார்கள் என நம்புகிறோம்...


இந்த இனிய புத்தாண்டு நன்னாளில் இவ்விருதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்! இதோ அடியேனின் பார்வையில் அந்த அற்புத பதிவர்கள்...


1.முத்தான பதிவர். எமது பதிவுலகப்பாதையின் வழிகாட்டி, அய்யா மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்கள்...!


2.துணிச்சலான கருத்துக்களுக்கு சொந்தக்காரர். அரசியல் நிகழ்வுகள் குறித்த அவர் படைப்புகள் வேகம் + விவேகம், பதிவர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள்.


3.ந‌வீனத்துவம் + சுவாரஸ்யங்கள் இழையோடும் பதிவுக்கு சொந்தக்காரர், அநங்கம் இதழாசிரியர் கே.பாலகுமாரன் அவர்கள்.


4.கவிதைகளாகட்டும், கருத்துக்களாகட்டும் தன்னலமின்றி பொதுந‌லம் சார்ந்து பதிவுகள் வழங்கும் மனோவியம் மனோகரன் அவர்கள்


4.யதார்த்தம் கல‌ந்த படைப்புகளால் வாசகர்களைக் கவரும் வாழ்க்கைப்பயண‌ம் விக்கினேசு அவர்கள்


5.கவின்மிகு கவிதாயினி தோழி புனிதா அவர்கள்!


6.இனிய கவிதைகளூக்கு சொந்தக்காரர், நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்


7.பின்னூட்டங்களுக்காகவே இந்த விருது பெறுபவர் நமது தல தமிழ்வாணன் அவர்கள்.
இவ்வேளை நம்ம பின்னூட்ட செம்மல் தல தமிழ்வானன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம், கூடிய விரைவில் தாங்களும் தமிழ்ப்பதிவராக பதவி உயர்வு பெற்று, தங்களின் படைப்புகளின் வழி தமிழ்ப்பதிவுல‌க்கு ஒளிசேர்க்குமாறு எட்டுப்பட்டி பதிவர்கள் சார்பாக காரசாரமாக கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ! (ம்ம்ம், எத்தனை நாளைக்குத்தான் பின்னூட்டங்கள் வழி எங்கள் தலையையே உருட்டுவீர்கள், பின்னூட்டங்கள் வழி நாங்களும் உங்களை கலாய்க்க வேண்டாமா ? )


விருதுகளை வாரி வழங்குவதில் நாம் பாரி வள்ளல் என்பது அனைவரும் அறிந்த விடயமே...(இதெல்லாம் ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப ஓவர்)
மேலும் பலரோடும் இவ்விருதை பகிர்ந்து கொள்ள நமக்கு பெரிதும் ஆவல்தான், என்ன செய்வது அறிமுகமின்மை நமது ஆசைக்கு த‌டைபோடுகிறதே, என்ன செய்ய‌...!


நல்லது நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவரை அன்புடன்....

Saturday, December 26, 2009

உள்ளேன் ஐயா...!

வணக்கம் தெய்வங்களே, நலமும் சுகமும் நமதாகுக...!

மனித வாழ்க்கை மிகமிக மகத்தானது, இந்த உலகின் அதியற்புத, புதிர் மிகுந்த ஓர் அம்சம் என்று அடியேன் சொன்னால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்களா நண்பர்களே? பின்னே, ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும், ஏனென்றால் அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது அல்லவா?

வாழ்க்கைப்பாதையானது மிகமிக நேர்த்தியானது! அதிசயமானது! வித்தியாசமானது! காலத்தின் கை பிடித்து பயணிக்கும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்! மாற்றங்கள்! ஏற்றத்தாழ்வுகள்! சுகதுக்கங்கள்! வெற்றி தோல்விகள்! உறவுகள் பிரிவுகள்! உண்மைகள் பொய்கள்! நிஜங்கள் நிழல்கள்!

வானவேடிக்கை இந்த வாழ்க்கை! அதில் மாற்றங்கள் எனும் வர்ணஜாலங்கள்! (எதற்கு இத்தனை பில்டப்புகள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது)

என்ன செய்வது, நம்ம வாழ்விலேயும் ஆண்டவன் அப்பப்போ அன்போட வந்து பாண்டி விளையாடிட்டு போறாரே, அதனால்தான் இந்த பிதற்றல், வேறென்ன சொல்ல! :-)

சில காலங்களுக்கு முன் வெளியீடு கண்ட உலகநாயகனின் "ந‌ம்மவர்" திரைபடத்தில் ஒரு காட்சி, அதில் முதிர்ந்த ஆசிரியர் திரு. நாகேக்ஷ் அவர்கள் அந்தப் பள்ளிக்கு புதிய ஆசிரியராக வரும் தனது முன்னால் மாணவன் @ நம்ம உலகநாயகன் அவர்களைப்பார்த்து ஒரு கமெண்டு அடிப்பார் பாருங்கள்! ஆசிரியர்களை அதிர வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஆசிரியராகும்போது தான் அந்த "பரவச" நிலையை உணர்வர் :-( அந்தக்காட்சியின் அர்த்தம் இப்பொழுதுதான் நமக்கும் புரிகிறது!

இந்தச் சந்தர்ப்பத்தில் ‌அடியேனுக்கு எழுத்தறிவித்த அத்தனை மூன்றாவது தெய்வங்களுக்கும் நமது முதற்கண் வணக்கம் உரித்தாகுக...! பாவம்யா அவங்க, நம்மையும் சமாளிச்சு கற்று கொடுத்திருக்காங்கன்னா, அவங்க கிரேட் தான். ஏன்னா இப்போ நாம குதிச்சிருப்பது அவங்க கோதாவிலேதான் :-)இப்போ மேற்காணப்பட்ட பிதற்றல்களுக்கான காரணம் :-(

இப்பதிவுலகிலும் சிறந்த பதிவர்கள் சிலர் ஆசிரியராக‌ விளங்குவது அறிகிறோம், அவர்களுக்குக்கும் இவ்வேளை நல்வாழ்த்துக்கள், (தெய்வம்பா நீங்கள்லாம்! :-)

சரி சரி நம்ம சுயபுராணம் போதும் விக்ஷயத்துக்கு வருவோம். பணியில் ப‌டுபிசியாக இருந்த காரணத்தினால் பதிவுப்பக்கம் தலை வைத்தே நாம் படுப்பதில்லை என்ற உண்மை அறிந்த ஒரு தமிழ்நெஞ்சம் தமது பதிவில், "ஏன் பதிவு எழுதுவதில்லை ?" என நண்பர்களோடு சேர்த்து நம்மையும் லெப்டு ரைட்டு வாங்க....

நமக்கு வெட்கம்! வேதனை! அவமானம் ஆகிப்போச்சு நண்பர்களே! இருந்தாலும் நாம யாரு? "கண்ட்ரோல் மாச்சோ"வாக அதையெல்லாம் அப்படியே மறைச்சு வச்சிட்டு, ஒரு பின்னூட்டம் வைத்து "உள்ளேன் ஐயா" அப்டின்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா அங்கிருந்து ஓடியாந்திட்டோம்ல! :-)(
தங்களின் பதிவுப் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நமது நண்பர்களுக்காகவே விக்ஷேசமாக அந்தப் பதிவுக்கு இங்கேயும் தரவிறக்கம் வசதி செய்யப்பட்டுள்ளது, பதிவ நண்பர்கள் கண்டிப்பாக படித்து பாட்டு வாங்கிக் கொள்ளுங்கள்! சரியா? இதோ உங்களுக்கே உங்களுக்காக..., http://manilvv.blogspot.com/2009/12/blog-post_14.html


சிவனேசு : "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
மனசாட்சி : "ம்ம்ம் எனக்கு மட்டும்தானா திட்டு ? நண்பர்களும் வாங்கிக்கொள்ளுங்கள் :-))


அடடா நாம் சொல்ல வந்த விக்ஷயமே வேறு, அதை விட்டுட்டு என்னென்னமோ பேசியாச்சு...


நல்லது நண்பர்களே, தற்பொழுது அநியாயத்துக்கு லேட் ஆகி, விடிகாலை மூன்று மணி என்று அலாரம் சுட்டுவதால், இப்போ நான் நித்திராதேவியை சந்திக்கப் போறேன்(தூங்கப்போகிறேன்), மீண்டும் கூடிய விரைவில் (நண்பர்கள் திட்டுவத‌ற்கு முன்பதாகவே) சிலபல சுவாரசியமான விடயங்களோடு மறவாது தங்களனைவரையும் சந்திக்கிறேன்...!

பின்குறிப்பு : நாமளும் ஒரு பதிவு போட்டாச்சு சாமியோவ்!