.

.
.

Tuesday, September 29, 2009

தேடிவந்த தேவதை



ஒரு தேவதை வந்துவிட்டார் தமிழ்ப்பூங்காவைத்தேடி...

உண்மைதான் நண்பர்களே... கேட்கும் 10 வரங்களை நிறைவேற்றும் அந்த அற்புதமான தேவதையை அனுப்பியது இயற்கை எனும் ஒரு இனிய‌ தேவதை...(ரொம்ம்ப்ப்ப‌ ந‌ன்றி இய‌ற்கை, நீங்க ரொம்ப்ப ரொம்ப்ப நல்லவிங்கபா..., நமக்கும் ஒரு தேவதையை ந்ல்ல மனசோட அனுப்பிச்சிருக்கிங்களே... :-)

சரி தேவதைக்கு நிறைய கடமைகள் இருப்பதாலும், பல பேரை சந்தித்து வரமளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதாலும் காலந்தாழ்த்தாமல் நமது பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகளில் சிறந்த , பத்து, இதோ தேடிவந்த‌ தேவ‌தையின் கடைக்கண் பார்வைக்காக...

1.கடவுள் கடவுள்னு ஒருத்தரை நம்புறோமே, அவரை கண்ணில் காட்டச் சொல்லணும்! (எமது இரத்தங்கள் ஈழத்தில் இரத்தம் சிந்திக்கொன்டிருக்க உமக்கு அவர்களைக் காப்பாற்றாமல் வேறென்ன தலை போகிற‌ வேலைன்னு சண்டை போடணும்! )
தேவ‌தை : அட, எங்கேப்பா அந்த‌ இய‌ற்கை ? எப்பேர்ப‌ட்ட‌ ஆள்கிட்ட‌ என்ன‌ மாட்டி விட்டிருக்கு ம‌க‌ராசி! :-(


2.நினைத்த பொழுது நினைத்த இடத்திற்கு சென்று வரும் சூப்பர் பவர் வேணு‌ம்! (ஹோல்லோவ் மேன் போல!) ந‌ம்ம பதிவை யார் யாரெல்லாம் திட்றாங்கன்னு அவ்ங்களுக்கே தெரியாம கண்டுபிடிச்சிடுவோம்ல...! :-))
தேவதை : நீ இப்டியே கேள்வி கேளு! நான் இப்போ காணாமப் போகப் போறேன் பாரு!

3.அடுத்த பிறவி வேணாம்! வேற வழி இல்லாமல் மீண்டும் அவதரிக்க நேர்ந்தால் ஒரு தமிழச்சியாகவே பிறக்கும் பாக்கிய‌ம் வேணும்!
தேவதை : "தமிழ்ப் பற்றாம்! தாங்கலடா சாமி!"

4.ந‌மக்குப் பிடித்த அத்தனை உறவுகளுக்கும் முன்பதாக வாழ்வை முடித்து வானுலகம் ஏகிடனும்! பிடித்தவர்களுக்கு பிரியாவிடை சொல்வது நமக்குப்பிடிக்காது! :-(
தேவதை : கன்பார்ம் நரகம்தேன்!

5.பணம் காய்க்கும் மரம் ஒன்று பணப்பெட்டிக்கு பக்கத்தில் வேண்டும். (எனக்காக‌ இல்லப்பா, சொன்னால் நம்புங்க! பெரிய பங்களா கட்டி , பக்கத்திலே பெரிய பூங்தோட்டம்லாம் கட்டி, அப்புறம் ஏழ்மையை துடைத்தொழிக்கப்போறோம்!!!? :-))
தேவதை : ஏழ்மையை ஒழிப்பாங்களாம்! கதை விடுற்த பாரு! இது மாதிரி வரம் கேட்ட எத்தனை பேர என் சர்வீஸ்ல பார்த்திருப்பேன்!

6.அப்பாவி மக்களை ஏமாற்றும் அடப்பாவி அரசியல்வியாதிகளெல்லாம் நல்லவர்களாய் மாறி நாட்டுக்கு தொன்டாற்ற வேணும்!
தேவதை : இருந்தாலும் உனக்கு ஓவர் பேராசை சிவனேசு! :-)

7.ந‌மக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரும் இன்றும் இறுதி வரை என்றும் நமக்கு நண்பர்களாகவே இருக்கும் அதிர்க்ஷ்ட‌ம் வேணும்.
தேவதை : பாவம்பா அவங்க!

8. இந்தப் பதிவைப் படிக்கும் அத்தனை வாசக நண்பர்களின் ஏதாவதொரு ந‌ல்ல ஆசையை நிறைவேற்ற வேணும் (சிவனேசு, சீக்கிரம் மர்மத்தொடரை முடிக்கனும் எனும் வேண்டுதலை மட்டும் தவிர்த்து! :-))
தேவ‌தை : ம்ம்ம் ந‌ட‌க்க‌ட்டும்! ந‌ட‌க்க‌ட்டும்!

9. உல‌க‌த்தின் வெப்ப‌ம‌ய‌ம் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது! எல்லா பூமி வ‌ள‌ங்க‌ளும் தீய்ந்து அழியும் முன் உலகத்தை சுற்றி ஒரு பெரிய‌ குடை வேணும்!
தேவ‌தை : ஆமாம்! முன்னேறுறேன் பேர்வ‌ழி என்று க‌ண்ட கண்ட‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளால் ஓசோனில் ஓட்டை போட‌வேண்டிய‌து, அப்புற‌ம் பேக் ஃபையர் ஆனப்புறம் ந‌ல்ல‌ பிள்ள‌ங்க‌ மாதிரி இப்படி ஞாய‌ம் வேற‌ பேசுற‌து!

10.அடியேனின் ந‌ண்ப‌ர் ஒருவரின் அன்புத்தாயார், 63 அகவை கொன்ட அவர் பெயர் தி‌ரும‌தி.மீனாம்பிகை, அந்த‌த் தாய் த‌ற்ச‌ம‌ய‌ம் புற்றுநோயால் பாதிப்புற்று வாடுகிறார். அவ‌ர் ந‌ல்லபடி ந‌ல‌ம் பெற்று ச‌க‌ஜ‌ வாழ்க்கைக்கு கூடிய விரைவில் திரும்ப வேண்டும்.
தேவ‌தை: "ந‌ல்ல‌வ‌ர்க‌ளை இறைவ‌ன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்"

வரமளித்த தேவதைக்கு நன்றி, வழிகாட்டி அனுப்பி வைத்த இயற்கை தேவதைக்கும் நன்றி, பதிவை படித்து விட்டு கமென்டு போடும் தேவதைகளுக்கும் நன்றி.அடுத்து இந்த தேவதையை நான் சிலருக்கு அனுப்புகிறேன் :-

* குறை ஒன்றும் இல்லாத குறை ஒன்றும் இல்லை அவர்கள்,
* சுவீட் பிரண்டு சுபாசினி,
* புன்னகைப்பூ புனிதா,
* தல தமிழ்வானன் அவர்கள்,
* நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு,
*மனோவியம் மனோகரன் அவர்கள்

இறுதியாக இந்த‌ப் பதிவை வாசிக்கும் தேவதை‌‌களே! உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள், அன்பு கூர்ந்து நோயால் பாதிப்புற்றிருக்கும் அந்தத் தாய்க்காக‌ பிரார்த்த‌னை செய்யுங்க‌ள்! உங்க‌ள் பிரார்த்த‌னை ம‌க‌த்தானது, ஒரு குடும்ப‌ தீப‌த்தின் சுட‌ர் பிர‌காசிக்க‌ அது நிச்ச‌ய‌ம் உத‌வும்! எந்த மனித மனம் பிற‌ உயிர்க்கு இர‌ங்குகிற‌தோ அந்த இதயமே இறைவன் வாழும் இருப்பிடம், த‌ய‌வு செய்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்க‌ள்! கூடிய‌ விரைவில் அந்த‌த்தாய் ப‌ரிபூர‌ண‌ ந‌ல‌மடைந்து விட்ட‌ ந‌ல்ல‌ செய்தியோடு அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ளில் உங்க‌ளைச் சந்திக்கிறேன், என்றும் அன்போடு...

Thursday, September 17, 2009

புறாவுக்கு பிறந்த நாளு! வாழ்த்துவோமே நாமும் இன்று!



நண்பர்களே, உங்களுக்கு சேதி தெரியுமா! நமது தமிழ் பதிவுலகில் சிறகு விரித்துப் பறக்கும் ஒரு அழகான, அமைதியான, அன்பான, அறிவான, அற்புதமான‌, அந்நியோன்யமான ("அ" வில ஆரம்பிக்கிற வேற நல்ல வார்த்தைகள் பிளீஸ்...!) புறாவுக்கு இன்று பிறந்த நாள்! :-)

ஆமாம், இன்று பிறந்த நாள் காணும் நம்ம ச‌மாதன‌ப் புறா சுபா அவர்களுக்கு, நமது மனம் நிறைந்த அன்பும், வாழ்த்துக்களும் உரித்தாகுக! தோழி வாழ்விலும், தாம் கைக்கொன்ட எல்லாத் துறைகளிலும் மேன்மேலும் "தல" சிறந்து விளங்கி, சாதனைப்பெண்ணாய் பூமியில் "பல ரவுண்டுகள்" வரவேண்டுமென்று ந‌ம்ம குல தெய்வம் மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வற்புறுத்தி வேண்டிக்கொள்கிறோம்! ‍

கலையாத கல்வியும்,
குறையாத வயதும் ,
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும் ,
குன்றாத இளமையும்
கழுபிணி இல்லாத உடலும்
சலியாத மனமும்,
அன்பகலாத மனைவியும்/(கணவரும்)
தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் ,
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் ,
கோணாத கோலும்-
ஒரு துன்பம் வாராத வாழ்வும் ,
துய்யனின் பாதத்தில் அன்பும்
உதவி பெரிய தொண்டரோடு கூட்டுகண்டாய்
இப்பதினாறு பேறுகளும் என்றும் பெற்று வளமாய்


அன்பான கண‌வரோடும், பிள்ளை குட்டிகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேர்த்திகள், கொள்ளுப்பேரன் பேர்த்திகள், எள்ளுப் பேரன் பேர்த்திகள் கூடவே புனிதாவைப்போல், குறை ஒன்றும் இல்லை அவர்களைப்போல்! இயற்கையைப்போல்! அடியேனைப்போல் சிறந்த நண்பர்கள் (அப்பாடா! சப்பான் சாடையிலே நம்மையும் சிறந்த நண்பர்னு சொந்தமா சொல்லி பாராட்டியாச்சு :-))) புடைசூழ சிரிப்பும் சந்தோக்ஷமும், களிப்பும், கலகலப்புமாக, கும்மாளமும் குதூகலமுமாக வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழ வாழத்துறோம்!

சரி சரி வெறும் பாராட்டுத்தானா! எனக்கேட்கும் சுபா அவர்களுக்கு வந்து குவிந்துள்ள பரிசுகளைப் பார்க்கலாம் வாருங்கள்!

முதலாவதாக சுபாவின் அம்மா அவர்கள்! சென்னை போத்திஸிலிருந்து சுபாவுக்காக ஒரு மிக மிக அழகான சந்தண நிறப்பட்டுப்புடவையோடு , அறவே விலை மதிக்க முடியாத அவரது அன்பு முத்தம் ஒன்று ஆசிர்வாதங்களின் கலவையோடு அன்பு மகளுக்காக!

அடுத்தாக சுபாவின், மறுபாதி! அவர் ஒரு அழகான பொட்டலம் ஒன்றை பரிசாக அனுப்பியிருக்கிறார், அதை யார் கண்ணிலும் படாமல் சுபா மறைக்க நாம் சிஐடி சங்கரியாக மாறி ஆராய்ந்ததில் கசிந்த உண்மை யாதெனில் அது அவரது ஆசைக்கணவரின் "அன்பு இதயமாம்"! ம்ம்ம் நல்லது நல்லது! :‍) சரியான நேரத்தில் சரியான பரிசு!

பிறகு, ஆ! அங்கே அழகாய் சிரித்துக்கொன்டு வருவது, அட நம்ம கவியரசி புனிதாதான்! தோழி என்ன பரிசு தருவார்? ஆவலோடு நாம் காத்திருக்க, தோழி விரைந்து வந்து சுபாவின் கையைப்பற்றிக்கொன்டு உருக்கமாக ஒரு கவிஜ பாட ஆரம்பித்துவிட்டார்!!!!!? என்னனு கேட்டா, அதுதான் அவர் பிறந்த நாள் பரிசாம்! பாவம் சுபா! :-( கோபத்தை அடக்கிக்கொன்டு, இரு இரு வச்சிக்கிரேன்! உன் பிறந்த நாள் வரட்டும்! என மனதிற்குள் கருவிக்கொன்டார் :-))

அடுத்ததாக நம் குறை ஒன்றும் இல்லை அவர்கள்! அமைதியாக வந்தவர் தமது சார்பாக சுபாவின் பதிவில் இட்டுக்கொள்ள "மலேசியா பாப்பம்மா" எனும் மிக உயரிய பட்டத்தை பெருமையோடு வழங்க, சுபா அதை ம‌கிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள! பிறந்த நாள் கூட்டம் நெகிழ்ச்சியோடு "மலேசியா பாப்பம்மா வாழ்க ! வாழ்க!" என ஆர்ப்பரிக்க, அட்டா சிறப்போ சிறப்பு !

அடுத்ததாக நம்ம இயற்கை அன்னையின் இ(னி)ளைய மகள், அழகான அவர் பெயர் இயற்கை மகள்!, நீலவான துகிலணிந்து, தென்றல்போல நடைபயின்று, புவி நோகாமல், அக்கினிச்சுடராய் ஒளிவீசும் வதனம் கொன்டு‌, தெளிந்த நீரோடைபோல் கனிந்த பார்வை கொன்டு சுபாவிடம் வருகிறார், வந்தவர் சுபாவுக்கு ஒரு அழகிய "ஏஞ்சல்" ஒன்றை கையில் கொடுத்து வாழ்த்தி வரமளிக்கிறார்! அடடா! ஒரு தேவதை தேவதையைப் பரிசளிக்கிற‌தே அதுவும் ஒரு தேவதைக்கு! (இயற்கை எப்போதுமே நமக்கு மிகவும் பிடித்த விக்ஷயம்!!!)

சரி சரி, அப்புறம் நீங்க என்ன பரிசு கொடுத்தீங்கன்னு தானே கேட்கறீங்க! ஒரு அழ‌கிய வைர அட்டியல், கூடவே செட்டாய் நாலு தங்கக்காப்புகள் , ஒரு சோடி நீலக்கல் பதித்த தேன்கூடு தோடு! அப்புறம் கையில் வச்சுக்கப்பா செலவுக்குன்னு ஒரு பத்தாயிரம்! வாவ்!
.
..
...
:-)
எல்லாம் கொடுக்க‌னும்னு ஆசைதான்! (அப்ப கொடுக்கலியா? வெறும் லுல்லுல்லாயியா!!!!?) ஆனால் பாருங்க‌! ம‌ன‌சுக்கு இருக்கிற‌ பெருந்த‌ன்மை மணிப‌ர்சுக்கு இருக்கமாட்டேங்குதே‌ என்ன‌ செய்ய!!!? அத‌னால‌, என‌து சார்பாக‌, என‌து அன்பு, அக்க‌ரை, பாச‌ம், நேச‌ம், அத்த‌னையும் ஒரு பெரிய‌ பொட்ட‌ல‌மாக‌க் க‌ட்டி தோழிக்கு ப‌ரிசாக ஏற்கனவே ஈமெயிலில் அனுப்பிவிட்டேன்! :-)

ச‌ரி ந‌ண்ப‌ர்க‌ளே, இந்த‌ குதூக‌ல‌மான‌ நிக‌ழ்ச்சியில் கூட‌வே ஒரு ம‌கிழ்ச்சியான‌ செய்தி, (நாம் சொல்லும் முன்பே, அப்பாடா இன்னைக்கு ம‌ர்ம‌ப் ப‌திவு இல்லை என்ப‌து தானே அது என்ப‌வ‌ர்க‌ளுக்கு) இதோ, இதோ வ‌ந்துகொன்டே இருக்கிற‌து, ஆத்மா எட்டாம் பாக‌ம், பாக‌ம் தான் எட்டு! முடிவோ இன்னும் எட்டாம‌ல் தான் இருக்கிற‌‌து! என்ன‌ செய்வ‌து நண்ப‌ர்க‌ளே, விதி வ‌லிய‌து அல்ல‌வா? :-)

நல்லது நண்பர்களே! புறப்படும் முன்பாக நம்ம சுபாவுக்காக பிரத்தியேகமாக ஒரு இனிமையான பாடல்! உலகிலேயே மிகவும் அதிகம் பேரால் தினம் தினம் விரும்பி பாடப்படும் இனிய பாடலான " ஹேப்பி பேர்த் டே" பாடல் இதோ சுபாவுக்காகவே விசேக்ஷமாக!

நண்பர்களே இன்று நமது தோழிக்கு பிறந்த நாள், எனவே எல்லோரும் ஓடிவந்து உங்கள் நட்பான வாழ்த்தை தோழிக்கு சமர்ப்பிக்கும்படி விண்ணப்பித்துக்கொன்டு விடைபெறுகிறேன்!

மீண்டும் ச‌ந்திப்போம்! என்றும் அன்போடு....!