.

.
.

Wednesday, June 17, 2009

யார்?

காலை வேளை, தூக்கம் விழித்த சூரியன், துயில் மீண்ட‌ உலகை, தன் பொற்கரங்களால் பற்றிப் படர்ந்து தட்டி எழுப்பிக்கொன்டிருந்தான். பொன்னிற ஒளி வெள்ளத்தில் பனி படர்ந்த சாலையோரப்பூக்கள் மெல்ல மெல்ல இதழ்விரித்துச் சிரித்துக்கொன்டிருந்தன, மக்கள் அங்கும் இங்கும் நடமாடிக்கொன்டு அந்த பேருந்து நிலயத்தை ஆக்ரமித்தமித்த வண்ணமிருந்தனர். அங்காடிக்கடைகளும் அதை நிறைத்திருந்த மனிதர்களும்,அன்றும் ஒரு இயந்திர வாழ்வுக்கு தங்களை தயார்படுத்தியபடி ... அலைமோத‌.....

இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ளாமல், பார்வையாளராக ஒரு ஓரம் அமர்ந்து போவோர் வருவோரை கவனித்தபடி, பேருந்துக்காக காத்துக்கொன்டிருந்த அவள் பெயர் மீனா. மேற்படிப்பைத்தொடர்வதற்காக‌ அவள் தன் தாய்நாடு விட்டு, பொருளாதாரத்திலும், கல்வித்தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு ஈடான மதிப்பைப் பெற்றிருந்த அந்த நாட்டிற்குள் தஞ்சம் புகுந்திருந்தாள். அங்கேயே ஒரு நிறுவன‌த்தில் பொருப்பான ஒரு பதவியிலும் தன்னை இருத்திக்கொன்டாள். தொழில் செய்தவாரே, பகுதிநேரமாக படித்துக்கொன்டு அங்கே வாழ்ந்திருந்தாள் அவள்.

அன்றைய நாள் அவள் தாயின் பிறந்த நாள்!, அவள் தாயிருப்பதோ மலேசியாவில், அவளிருப்பதோ அந்த அண்டை நாட்டில், என்ன செய்வது? வருடா வருடம் வரும் தீபாவளி அன்றுதான் அவள் தன் குடும்பத்தினரை சந்திக்கும் வேளை வாய்க்கும், நினைத்தபடி ஓடிக்கண்டுவரும் நிலையில் அவள் இல்லையே, படிப்பையும், வேலையையும் விட்டு விட்டு நினைத்தபடி ஓடினால், சீட்டைக் கிழித்து ஊருக்கு மூட்டை கட்டி அனுப்பிவிடும் நாடு அது! ஒரு முறை பெயரைக் கெடுத்துக்கொன்டால், பின்னர் என்ன கரணம் போட்டாலும் அங்கு வேலை கிடைப்பது என்பது அரிதான செயலாகிவிடும், என்ன செய்வது? நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை என்பதே இப்படித்தான், நினைத்ததை உடனே அடைய முடியாத நிலை!

அந்த நாள் ஒரு வெள்ளிக்கிழமை. அலுவலக வேலை 8.30 மணிக்கு மேலேயே துவங்கும். ஆகவே காலையில் முதல் வேளையாக தான் வேலைக்குச்செல்லும் வழியிலிருக்கும் அந்த அம்மன் ஆலயம் சென்று அம்மா பேரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என முதல் நாளே மனதிற்குள் முடிவுசெய்துகொன்டாள். அந்த வியாழன் இரவு 12 மணிக்கு தன் தாயை தொலைபேசியில் அழைத்து முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லி ஆனந்தப்பட்டுக்கொன்டாள்.

சொல்லி வைத்தாற்போல் சரியான நேரத்தில் அவள் பயணிக்கவேண்டிய பேருந்து அங்கிருந்த பயணிகளை தனக்குள் உள்வாங்கிக்கொன்டு பயணிக்கத்துவங்கியது. மீனா பேருந்தின் கடைசிப்பகுதியில் காலியாயிருந்த சன்னலோரமான ஒரு இருக்கையில் அமர்ந்துகொன்டாள். பேருந்தின் குளிர்சாதன வசதி, முதுகுத்த‌ண்டில் குளிர்ந்த நீரை ஊற்றியதைப்போல் நடுங்கச்செய்தது. சில வருடங்களாகவே பழகிப்போன விடயம்தான், எனவே தான் அணிந்திருந்த நீல சுரிதாரின் முந்தானையை முழுதாக இழுத்து போர்த்திய வண்ணம் தன் கவனத்தை வெளிகாட்சிகளில் செலுத்தத்துவங்கினாள் அவ‌ள்.

என்ன ஒரு அழகான நாடு, சுத்தத்திற்குத்தான் அங்கே முதலிடம், நமது நாட்டைப்போல‌, இயற்கை வளங்கள் கொழிக்கவில்லைதான், இருப்பினும் அந்நிய செலாவனி வந்து குவிகிறதே, செயற்கையான அழகுக்காட்சிகளுக்கு அங்கு பஞ்சமேயில்லை எனலாம், அங்குள்ள மக்களும் வீணே அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதவர்கள்! யாரைப்பற்றியும் யாருக்கும் அக்கறை கிடையாது, இளசுகளுக்கு அவரவர் கையில் ஒரு கைப்பேசி, காதுகளை மறைத்திருக்கும் குட்டி வாக்மேனிலிருந்து வரும் இசை என அவரவர்க்கு ஒரு தனியுலகம் அங்கே! தானுண்டு தன் வேலையுண்டு எனும் கொள்கையில் மூவினமும் அங்கே முன்னேற்றப்பாதையில...

மீனாவின் கண்கள் வெளிக்காட்சிகளை நோட்டமிட்டவாறு பயணித்தாலும் அவள் மனம் மட்டும் அவள் வசம் இல்லை, அது தன் தாயை எண்ணி ஏங்கிக்கொன்டிருந்தது, எத்தனைப்பெரிய பெண்ணானாலும் உணவை அன்போடு ஊட்டிவிடுவது, அழகாக சேலை கட்டி விட்டு பார்த்து ரசிப்பது, மடியில் படுக்கவைத்து கேசம் வருடி விடுவது, அவர் மீது, வாசனைத்திரவியத்தின் உபயோகம் இல்லாமலேயே வீசும் மெல்லிய சந்தண வாடை என அனைத்தும் அவள் அன்னையின் அருகாமைக்காக் அவளை ஏங்கவைத்துக்கொன்டிருந்தன‌, எத்தனை சொந்தங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே, அத்தனையும் ஒரு தாயாகுமா? எத்துனை பொருள் பொதிந்த வைரவரிகள், உண்மைதான், எண்ணங்கள் ஊற்றேடுத்து விழி நிறைத்து கண்ணம் இறங்கியது அருவியாய்.
பேருந்து ஆங்காங்கே நின்று பயனிகளை ஏற்றிக்கொண்டும், இறக்கிவிட்டுக்கொன்டும் பயணித்துக்கொன்டிருந்தது. இதோ இன்னும் சில தூரம் கடந்தால் அவள் இறங்க வேண்டிய அந்த ஆலயத்தை அடைந்துவிடலாம். லேசாக கண்களை மூடியவாறு தன் இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்துகொன்டாள், பேருந்தின் தாலாட்டில் பயணம் தொடர்கிறது.
திடீரென யாரோ தனை அழைப்பதைபோல உணர்ந்து அவள் கண்விழிக்க அங்கே...................
(தொடரும்)



2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல வர்ணனை... மெலும் எழுதுங்கள். அதிரடியான கதையாக இதை எதிர்ப்பார்க்கிறேன்.

sivanes said...

முயற்சி செய்கிறேன், விக்னேக்ஷ்வரன்.